"தொகுதி இட ஒதுக்கீடு, சுழற்சி முறையை உறுதி செய்க" : மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

உள்ளாட்சி தேர்தல் நடைமுறை குறித்து மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு செய்துள்ளது.

Update: 2019-11-30 19:04 GMT
அந்த மனுவில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும் என, திமுக தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை திமுக எதிர்க்கவில்லை, என்றும், அந்த மனுவில் திமுக குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் நிறைவேற்ற வேண்டும் எனவும் திமுக மனுவில் கூறியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்