முன்விரோதம் காரணமாக 2 பேருக்கு அரிவாள் வெட்டு : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திண்டுக்கல் மாவட்டத்தில் முன் விரோதம் காரணமாக இருவருக்கு அரிவாள் வெட்டு.

Update: 2019-11-22 09:31 GMT
திண்டுக்கல், என்.ஜி.ஓ காலனி உழவர் சந்தை அருகில் கறிக்கடைக்காரர் உள்ளிட்ட 2 பேரை, 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. திருச்சியை சேர்ந்த முத்தையா என்பவர், ஆட்டுக்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், முத்தையாவையும், தடுக்க வந்த, கடையில் உடன் வேலை பார்த்த தாமஸ் என்பவரையும் பயங்கர ஆயுதங்களுடன் வெட்டியது. இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக அரிவாள் வெட்டு நடந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  
Tags:    

மேலும் செய்திகள்