பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச்செல்ல எதிர்ப்பு : அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை தர நீதிபதி உத்தரவு

சிவகங்கை​ மாவட்டம் மணலூரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை,பொதுப்பாதை வழியாக எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து, ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Update: 2019-11-21 19:50 GMT
சிவகங்கை​ மாவட்டம் மணலூரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை, பொதுப்பாதை வழியாக எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து,  ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. பொதுப்பாதை வழியாக உறவினரின் உடலை எடுத்துச்செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரயன்,  மானாமதுரை டிஎஸ்பி, திருப்புவனம் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வுசெய்து, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நாளை ஒத்திவைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்