7 கப்பல்களில் இலங்கை கடற்படை ரோந்து : சிறைபிடிப்பு அச்சத்தில் திரும்பிய மீனவர்கள்

இலங்கை கடற்படையினரின் தீவிர ரோந்து காரணமாக, ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் இரவோடு இரவாக கரைக்கு திரும்பி உள்ளனர்.

Update: 2019-11-21 07:41 GMT
இலங்கை கடற்படையினரின் தீவிர ரோந்து காரணமாக, ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் இரவோடு இரவாக கரைக்கு திரும்பி உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கு சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, மன்னார் முதல் நெடுந்தீவு வரையிலான பகுதியில், இலங்கை கடற்படையினர் 7 கப்பல்களில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த மீனவர்கள் தங்களை சிறை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வலைகளை அங்கேயே போட்டு விட்டு இரவோடு இரவாக அனைவரும் கரை திரும்பி உள்ளனர். இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம், இலங்கை கடற்படையின்  கப்பல் மோதியதில், விசைப்படகு ஒன்று சேதமடைந்து, கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்