பிறந்து 3 நாளான பச்சிளங்குழந்தை உயிரிழப்பு : தவறான ஊசி போட்டதால் இறந்ததாக புகார்

அரசு செவிலியர் செலுத்திய தவறான ஊசியால், பச்சிளங்குழந்தை உயிரிழந்தது.

Update: 2019-11-21 02:08 GMT
அரசு செவிலியர் செலுத்திய தவறான ஊசியால், பச்சிளங்குழந்தை உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கோதண்டராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளி. இவரது மனைவி சோனியா, பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. 3 நாட்களுக்கு பிறகு குழந்தைக்கு மருத்துவமனையில் உள்ள செவிலியர் தோல் வியாதிக்காக  ஊசி போட்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்தது. இதனால் உறவினர்கள் திரண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்