சமூக ஆர்வலர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்

சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-13 14:27 GMT
சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மத்திய சிறையில் உள்ள முகிலன், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில்  ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் முகிலனுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமூக பிரச்சினையில் பங்கு எடுத்த முகிலன் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தாமதமாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி சுவாமிநாதன், முகிலனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்