"சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடைமுறை" - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

"அமல்படுத்துவது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்"

Update: 2019-11-08 20:05 GMT
சாட்சிகளின் வாக்குமூலம் குறித்து  உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துக் கொண்டு, "கடந்த 2 மாதங்களில், சாட்சிகள் பிறழ்சாட்சியம் அளித்ததால், குற்றவாளிகள் விடுதலையானது தெரிய வந்தது'' என சுட்டிக் காட்டியுள்ளது.  எனவே, சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆடியோ மற்றும் வீடியோவில் பதிவு செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், இதுகுறித்து அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி,  நவம்பர் 13-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்