முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் : 7 நிறுவனங்கள் விரிவாக்கம், கால நீட்டிப்புக்கு ஒப்புதல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-11-07 10:37 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 7 தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்வதற்கும், கால நீட்டிப்புக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  புதிதாக தொழில் தொடங்க உள்ளோரை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் வழங்கி, முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதேபோல, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வணிக வரி நிலுவைத் தொகையை, வசூலிக்கவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்