சிவகங்கை: கரடு முரடான சாலையால் மக்கள் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் - மரகதபுரம் சாலை பணிகள் நிறைவு பெறாத நிலையில், கரடு முரடான இந்த சாலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2019-11-07 09:53 GMT
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் - மரகதபுரம் சாலை பணிகள் நிறைவு பெறாத நிலையில், கரடு முரடான இந்த சாலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கரடு முரடாக காட்சியளிக்கு இந்த சாலையை, அன்றாட பயணங்களுக்கு பயன்படுத்த முடியவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே விரைவில் பணிகளை முடித்து சாலையை பயன்பாட்டிற்கு விடவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   


Tags:    

மேலும் செய்திகள்