"அதிநவீன வசதிகளுடன் கால்நடை ஆம்புலன்ஸ் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி"

கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-05 19:31 GMT
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்