தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
தர்மபுரி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தர்மபுரி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வெண்ணாம்பட்டியில் வடிவேல் என்பவர் வீட்டில் அருகே மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், அந்த வழியே விவசாயி பழனி என்பவர், தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததால் அவர் சத்தமிட்டார். அவரை காப்பாற்ற சென்ற தேவராஜ் என்பவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.