"போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவியுங்கள்" - தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

அரசு போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2019-10-16 20:14 GMT
அரசு போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகத்தில்  1 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்குமாறு தமிழக அரசை, விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்