சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கீழநாட்டுக்குறிச்சியில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-15 20:40 GMT
தூத்துக்குடி மாவட்டம் கீழநாட்டுக்குறிச்சியில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பொதுநல வழக்கை  நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மணல் அள்ளுவதை தடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை அனுமதி அளித்திருந்தால், நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அனுமதியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்