அக். 18-ல் பெரியார் அணை திறப்பு - முதல்வர் உத்தரவு

பாசனத்திற்காக, பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-15 19:36 GMT
பாசனத்திற்காக, பெரியார் அணை வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக 120 நாட்களுக்கு மொத்தம்  ஆயிரத்து 37 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், இதன்மூலம்,  5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உறுதி அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்