திருநங்கையுடன் திருமணம் செய்தவர் - பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

மதுரையில் திருநங்கையை திருமணம் செய்த ஒருவர், பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

Update: 2019-10-15 03:57 GMT
மதுரையில் திருநங்கையை திருமணம் செய்த ஒருவர், பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். மதுரை சுண்ணாம்பு காளவாசல் பகுதியைச்  சேர்ந்தவர் பஷீர். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தை சேர்ந்த திருநங்கை கல்கியை பஷூர், காதலித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்டு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். தங்களுக்கு  பாதுகாப்பு தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்