நாங்குநேரி : காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2019-10-13 04:16 GMT
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 90 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்தார். பிற மாநிலத்தவர்களை தமிழகத்திற்கு வரவழைத்து வேலை வழங்குவதற்காகவே, ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை என்ற திட்டம் கொண்டு வரப்படுவதாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்