வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்

வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-24 09:04 GMT
வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்ற தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் இருப்பிட சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் விதிமீறல் செய்திருந்தால், கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களின் சான்றிதல்களை மீண்டும் சரிபார்க்கலாம் என்று அறிவுறுத்தினார். அனைத்து பணிகள் முடிந்த நிலையில், மீண்டும் புதிய மருத்துவ கலந்தாய்வு நடத்துவது சாத்தியமில்லை என நீதிபதி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்