சென்னையில் போலி பஸ் பாஸ் தயாரித்தவர் கைது

சென்னையில் போலி பஸ் பாஸ் தயாரித்து மாணவர்களிடையே விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-18 20:48 GMT
சென்னையில் போலி பஸ் பாஸ் தயாரித்து மாணவர்களிடையே விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூரை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் தாம்பரம் மெம்ஸ் பேருந்து நிலையம் வந்து இறங்கிய போது டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையிட்டனர். அப்போது பள்ளி மாணவனிடம் போலி பஸ்பாஸ் இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. பள்ளி மாணவனிடம் விசாரணையில் ஈடுபட்டதில் புது பெருங்களத்தூரில் ஒரு நெட் சென்டர் உரிமையாளர் போலீயாக பஸ் பாஸ் தயாரித்து 60 ரூபாய்க்கு விற்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்துஅங்கு சென்ற தாம்பரம் போலீசார் நெட் சென்டர் உரிமையாளர் கெளதம் என்பவரை கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்