சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம்: தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னையில் மின்கம்பியை மிதித்து 14 வயது சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

Update: 2019-09-17 09:57 GMT
சென்னையில் மின்கம்பியை மிதித்து 14 வயது சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் முறையிட்டார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொது நல வழக்காக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்