ஹெல்மெட் - 2 நாளில் 1.18 லட்சம் பேர் மீது வழக்கு

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Update: 2019-09-16 21:49 GMT
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 36 ஆயிரத்து 815 பேர் மீதும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 28 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்