கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-16 13:28 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏ.கே.சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆதி திராவிடர் மற்றும் அருந்ததிய மாணவர்களுக்கான தமிழக அரசின் கல்வி உதவித் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்குள் விடாமல் கல்லூரி நிர்வாகம் வெளியே அனுப்பியது. இதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்