கல்லணையில் இருந்து 18,312 கன அடி நீர் திறப்பு

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்துக்காக 18 ஆயிரத்து 312 கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-08 07:22 GMT
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பாசனத்துக்காக 18 ஆயிரத்து 312 கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் வரும் நிலையில், காவிரியில் ஏழாயிரத்து 502 கனஅடியும், வெண்ணாற்றில் ஏழாயிரத்து 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாயில், இரண்டாயிரத்து 804 கனஅடியும், கொள்ளிடத்தில் 506 கன அடிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்