பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியருடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-26 11:18 GMT
வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில், அவரது கூரை வீட்டின் மற்றொரு பகுதியில் வாடகைக்கு வசித்து வரும் கிருஷ்ண மூர்த்தி  வீட்டை காலி செய்ய மறுத்து தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வேல்முருகனின் மனைவி தனலட்சுமி தனது இரு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தினர். போலீசாரிடம் பல முறை இது குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்