திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் சாமி உலா

புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-08-24 03:52 GMT
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 20ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் 4ம் நாளான நேற்று  சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுடன் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்