அத்திரவரதர் உற்சவத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு விழா

அத்திரவரதர் உற்சவத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2019-08-22 02:44 GMT
காஞ்சிபுரத்தில், அத்திரவரதர் உற்சவத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்