புவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்

உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

Update: 2019-08-20 11:41 GMT
உலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும், உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில், காலநிலை அவசரநிலை பிரகடனம் அறிவிக்க கோரி, பிரச்சார இயக்கத்தை பசுமை இயக்க நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜிகே மணி, முன்னாள் அமைச்சர் ஏகே மூர்த்தி, பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்