வரதராஜ பெருமாள் கோயில் - உற்சவர் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பு

அத்திவரதர் உற்சவம் நடந்து வரும் நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத கருடசேவை நடைபெற்றது.

Update: 2019-08-15 14:54 GMT
அத்திவரதர் உற்சவம் நடந்து வரும் நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத கருடசேவை நடைபெற்றது. இதில் உற்சவர், சிறப்பு அலங்காரத்துடன் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அனந்தசரஸ் குளத்தின் அருகே வாணவேடிக்கையுடன் கஜேந்திர மோட்சம் அளித்து கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்