அத்திவரதர் தரிசன வைபவத்தை நீட்டிக்க கோரி முறையீடு : விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவு

இன்னும் 4 நாட்கள் மட்டுமே அத்திவரதர் காட்சி தருவதால், காஞ்சிபுரத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2019-08-13 19:48 GMT
இன்னும் 4 நாட்கள் மட்டுமே அத்திவரதர் காட்சி தருவதால், காஞ்சிபுரத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறினர். இதனிடையே, அத்திவரதர் தரிசன வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்