சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்லுயிர் பெருக்க அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-12 11:57 GMT
சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்லுயிர் பெருக்க அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் இது தொடர்பான இடத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பூங்காவில், மூலிகை மற்றும் அரிய வகை தாவரங்கள் மற்றும் அது தொடர்பான தகவல் மையம், பட்டாம்பூச்சி பூங்கா உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்