திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-11 13:56 GMT
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்தார். திருமங்கலத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தென் தமிழகத்துக்கு அழைத்து வர முயற்சி எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்