உலகின் புத்தகம் திருக்குறள் - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

உலகத்தின் புத்தகம் என திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-04 21:14 GMT
உலகத்தின் புத்தகம் என திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பொன்னேஸ்வரர் மடத்தில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதன் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் பாண்டியராஜன்,  திருக்குறளை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். கீழடி அகழ்வாராய்ச்சியை விரிவுபடுத்த மத்திய அரசிடம் உதவி கேட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் உள்ள மூன்றாயிரம் ஊர்களின் பெயரை தமிழில் மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்