போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் சவாலாக உள்ளன - சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர்

போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தான் பெரும் சவாலாக மாறியுள்ளது என சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-31 13:20 GMT
போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தான் பெரும் சவாலாக மாறியுள்ளது என சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன் இந்தியாவில் தான் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்தில் உயரிழப்பதாகவும், அதில் தமிழகம் தான் முதலிடம் என குறிபிட்டார். எல்லாவற்றிலும் முன்னோடிகளாக இருக்கும் தமிழர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் பின் தங்கியுள்ளனர் என எழிலரசன கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்