தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா : ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி தூய பனிமய மாத பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2019-07-28 18:56 GMT
தூத்துக்குடி தூய பனிமய மாத பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக கத்தோலிக்க பேராலயங்களில் பழமையான பனிமய மாதா பேராலயத்தின் 437 வது ஆண்டு பெருவிழா கடந்த  26 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திவ்விய நற்கருணை பவனி விழா  நடைபெற்றது. இதை முன்னிட்டு தேவாலயத்தின் நற்கருணைப் பேழை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.  வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பேராலய பெருவிழா நடைபெற உள்ளதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்