கார்கில் போர் வெற்றி நினைவு தினம் : மேஜர் சரவணன் உருவம் பொறித்த தபால் தலை வெளியீடு
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திருச்சியில் திறக்கப்பட்டது.
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திருச்சியில் திறக்கப்பட்டது. தென்னிந்திய படைப்பிரிவு தலைவர் நடராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் நினைவிடத்தை திறந்து வைத்தனர். பின்னர் மேஜர் சரவணன் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேஜர் சரவணன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.