மொய் விருந்தில் ஒரே நாளில் 7 கோடி வசூல்

புதுக்கோட்டை அருகே நடந்த மொய் விருந்தில் ஒரே நாளில் 7 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

Update: 2019-07-25 11:13 GMT
சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்ட மொய் விருந்து விழாக்களை இன்றும் சில கிராமங்கள் பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் மொய் விருந்து நிகழ்வு இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வடகாடு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மொய் விருந்து நிகழ்வை நடத்தினார். இதற்காக, புதுக்கோட்டை அருகே வடகாடு பகுதியில் உள்ள அவரின் வீட்டில் ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு வந்தவர்களுக்கு பரிமாறப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் வழங்கிய மொய் பணம் 7 கோடி ரூபாய் வரை வசூலாகி உள்ளது. இந்த பணத்தை கொண்டு தனது வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக கிருஷ்ணமூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்