பக்தர்களுக்கு உரிய வசதி செய்யப்படும் - எடப்பாடி பழனிச்சாமி

பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.

Update: 2019-07-23 18:56 GMT
அடுத்தடுத்த நாட்களில், பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார். 

அத்திவரதரை தரிசித்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :

காஞ்சிபுரத்தில், 23 - வது நாளாக இன்று, இளம் பச்சை நிற பட்டாடையில் காட்சி தந்த அத்திவரதரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம் செய்தார். அதிகாலை முதலே, பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து, அத்தி வரதரை தரிசனம் செய்தனர். இரவு 7 மணி அளவில் காஞ்சிபுரம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அத்திவரதரை தரிசனம் செய்தார்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய முதலமைச்சர் :

கோவில் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கிய முதலமைச்சர், பின்னர் பக்தர்களுடன் சேர்ந்து அதை சாப்பிட்டார் .தொடர்ந்து பக்தர்கள், சிரமமில்லாமல் வந்து செல்ல செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்