கடலுக்கு சென்று மாயமான மீனவர்களின் தற்போதைய நிலை என்ன? - அறிக்கை கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

கடலுக்கு சென்று மாயமான மீனவர்கள் இருவரை கண்டுபிடிக்க கோரிய மனுவுக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.;

Update: 2019-07-15 19:19 GMT
கடலுக்கு சென்று மாயமான மீனவர்கள் இருவரை கண்டுபிடிக்க கோரிய மனுவுக்கு, பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜூலை 4ஆம் தேதி பாம்பனில் இருந்து தமது உறவினர்கள் நால்வர் கடலுக்கு சென்றதாகவும், அதில், கரை திரும்பாத இருவரை கண்டுபிடிக்க கோரி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு, தேடுதல் தொடர்பான தற்போதைய நிலை குறித்த அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்