தடுத்து நிறுத்தப்பட்ட 14 வயது சிறுமியின் திருமணம்

திருத்தணியில் 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் தடுத்தி நிறுத்தினர்.

Update: 2019-07-15 05:57 GMT
திருத்தணியில் 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் தடுத்தி நிறுத்தினர். திருத்தணி அடுத்த மத்துார் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞருக்கும், அதே பகுதியை சேர்ந்த 14வயது சிறுமிக்கும் காலை திருமணம் நடக்கவிருந்தது. இதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை திருமண மண்டபம் ஒன்றில் பிரம்மாண்டமான முறையில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தகவல் அறிந்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் திருத்தணி போலீசார் விரைந்து வந்து 
திருமணத்தை தடுத்து நிறுத்தி, சிறுமியை மாவட்ட சிறுமிகள் காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் இரு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்