வீட்டின் பின்பக்க கதவு உடைப்பு : பொறியாளர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை

ஆவடி , திருமுல்லைவால் கமலம் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி.

Update: 2019-07-14 09:48 GMT
ஆவடி , திருமுல்லைவால் கமலம் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. பெங்களூரில் ரயில்வே பொறியாளராக பணிபுரிந்து வரும், அவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று குடும்பத்துடன் தி நகர் கடைவீதிக்கு சென்று விட்டு  திரும்பிய அவர் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பீரோவில் இருந்த 80 சவரன் நகை கொள்ளை யடிக்கப்பட்டதை கண்டு வேதனை அடைந்த அவர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.. போலீசார்  வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்