சத்தியமங்கலம் : புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-14 02:14 GMT
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய 4 பேருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் மர்ம நபர்கள் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் ஜான்சன் தலைமையில் வனப்பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் ஒரு காரில் கையில் துப்பாக்கியுடன் இருந்த 4 நபர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கி மற்றும் மானின் உடலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 4 பேரையும் சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் அருண்லால் முன்னிலையில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். 4 பேருக்கும் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்