காஞ்சிபுரம் : அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்தவர் ஜெய விஷ்ணு. அந்த பகுதி அதிமுக நிர்வாகியான அவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உத்திரமேரூர் காவல் நிலையம் எதிரே துரத்தி துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளனர்.

Update: 2019-07-10 05:49 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்தவர் ஜெய விஷ்ணு. அந்த பகுதி அதிமுக நிர்வாகியான அவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உத்திரமேரூர் காவல் நிலையம் எதிரே துரத்தி துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர் செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த மர்ம கும்பல், ஜெயவிஷ்ணுவின் நண்பரான வெங்கடேசையும் சராமாரியாக வெட்டி உள்ளது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து இருவரை சரமாரி மர்ம நபர்கள் வெட்டிய இந்த சம்பவம் உத்தரமேரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்