கிருஷ்ணகிரி : கடன் தொல்லை காரணமாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொல்லை காரணமாக இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2019-07-10 02:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொல்லை காரணமாக இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். பர்கூர் துரை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் , தனது தங்கையின் கணவருக்கு ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தந்துள்ளார்.ஆனால், தங்கையின் கணவர் கடனை திருப்பித் தராததால் பணம் அளித்தவர்கள் செந்தில்குமாரை தொல்லை செய்துள்ளனர். இதனால் மணமுடைந்த செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்த, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், செந்தில்குமாரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்