வீடு கட்ட பொருட்களை எடுத்து சென்றால் வனத்துறையினர் பணம் வசூலிப்பதாக பழங்குடியினர் புகார்

வனத்துறையினர் தங்களிடம் பணம் வசூலிப்பதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2019-07-08 23:01 GMT
வனத்துறையினர் தங்களிடம் பணம் வசூலிப்பதாக, நெல்லை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் புகார் மனு அளித்தனர்.புகார் மனுவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், வீடு கட்ட மண்,கற்கள் எடுத்து சென்றால் வனத்துறையினர் பணம் கேட்கின்றனர் எனவும் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், அவமதிக்கும் வகையில் வனத்துறையினரின் செயல்பாடு உள்ளது என்றும் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்