திருத்தணி கோவிலில் நடிகர் லாரன்ஸ் சாமி தரிசனம்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2019-07-07 21:59 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடிகர் ராகவா லாரன்ஸ், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நடிகர் ராகவா லாரன்சை, காண ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டதால் திருத்தணி மலைக்கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி லாரன்சை அனுப்பிவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்