மன்னார்குடி : காவலர் வீட்டிலேயே பூட்டை உடைத்து கொள்ளை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவலர் வீட்டிலேயே, பூட்டை உடைத்து 10 சவரன் தங்கம், 400 கிராம் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-07-07 09:49 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவலர் வீட்டிலேயே, பூட்டை உடைத்து 10 சவரன் தங்கம், 400 கிராம் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாமரைச்செல்வி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர்கள் இருவர் இவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் தாமரைச்செல்வி அளித்த புகாரை அடுத்து, அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.   
Tags:    

மேலும் செய்திகள்