ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் காலம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு, 5வது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-25 12:40 GMT
கடந்த 2017, செப்டம்பர் மாதம் முதல் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்த ஆணையத்தின் கால அவகாசம் 4 முறை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 4 மாதம், கால அவகாசத்தை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனிடையே, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு, வரும் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்