லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது...

மதுரையில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-23 00:42 GMT
மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காததன் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக,  தொழிலாளர் நலத்துறை சார்பு ஆய்வாளர் சரோஜா என்பவர் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் படி, மருத்துவமனை ஊழியர் முத்துவேல் என்பவர், ரசாயனம் தடவிய பணத்தை, சரோஜாவிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சரோஜாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்