தேசிய கீதம் பாடலில் தவறாக இடம்பெற்ற வார்த்தைகள் - சரி செய்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

தேசிய கீதம் பாடலில் தவறாக இடம் பெற்றுள்ள வார்த்தைகளை சரி செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Update: 2019-06-21 00:29 GMT
தேசிய கீதம் பாடலில் தவறாக இடம் பெற்றுள்ள வார்த்தைகளை சரி செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்திலும், இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இரண்டாம் வகுப்புப் பாட புத்தகத்திலும், தேசிய கீதம் பாடலில் சில வரிகள் தவறாக இடம் பெற்றிருந்தன. இது குறித்து தகவலறிந்த, பள்ளிக்கல்வித்துறை தவறான வார்த்தைகளை உடனடியாக திருத்தம் செய்து கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களை  கேட்டுக்கொண்டுள்ளது. கல்வித்துறை இயக்குனரின் அறிவுறுத்தலை கோடிட்டு காட்டி,  பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குனர்  ஜெயந்தியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்