3 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியில் மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.

Update: 2019-06-16 20:25 GMT
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியில் மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்த முருகன் மற்றும் குமாரசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் சடங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் சிறுவனும், பெண் மற்றும் 2 குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் உயிரிழப்புகளுக்கு தலைகவசம் அணியாதது தான் காரணம் என்று கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்