கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவது வழக்கம்தான் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கோடை காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு வருவது வழக்கமானது தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு வருவது வழக்கமானது தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற பால் முகவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆவின் பாலில் கலப்படம் என்பது உண்மையில்லை எனவு, அவ்வாறு கலப்படம் செய்யப்படுவதை நிரூபித்தால், அதற்கு தான் பொறுப்பேற்று கொள்வதாகவும் கூறினார்.